தமிழக நூலகத் துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் (88) கம்பம் நகரில் திங்கள்கிழமை மாலை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சின்னமனூரில் 1925 ஜூன் 10ம் தேதி பிறந்த வே.தில்லைநாயகம், நூலகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். 1949-ல் பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் ஆனார். 1962-ல் கன்னிமாரா பொது நூலகத்தில் நூலகரானார். 1972-ல் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982-ல் ஓய்வு பெற்றார்.
நூல்கள் பல எழுதியுள்ளார். இவர் எழுதிய "நூலக உணர்வு' (1971), "வள்ளல்கள் வரலாறு' (1975), "இந்திய நூலக இயக்கம்' (1978) முதலிய நூல்கள் தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை. "இந்திய நூலக இயக்கம்' என்ற நூலைப் பாராட்டி 1982-ல் உலகப் பல்கலைக் கழகம், அவருக்கு கெüரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. இவருக்கு மனைவி கோமதியம்மாள், மகன் அருள்வேலன், மகள் அன்பரசி உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கம்பத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு:04554 - 271597.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

