சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள அனுமந்தக்குடி பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அனுமந்தக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண் சிறப்பு ஆசிரியராக இருப்பவர் சீனிராஜன். இவர் மீதும், அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வேதமாணிக்கம் மீதும் மாணவிகளை கடந்த ஆண்டு சுற்றுலா அழைத்துச்சென்ற போது பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை செய்த மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், ஆசிரியர்கள் இருவர் மீதும் தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் இருவர் மீதும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தனர்.
ஆசிரியர் வேதமாணிக்கம் மீது புகார் எழுந்த அன்றே அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ஆசிரியர் சீனிராஜன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆசிரியர் சீனிராஜன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.
இதுகுறித்த அறிக்கை உளவுத்துறை போலீஸôர் மூலம் மேலிடத்திற்குச் சென்றதாம். இதன்பிறகு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் அளித்த உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெயலெட்சுமி, ஆசிரியர் சீனிராஜனை பணி இடைநிக்கம் செய்து உத்தரவிட்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

