கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் ரசாயனக் கலவைப் பூச்சு பூசுவதற்காக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்தச் சிலை உப்புக் காற்றால் சேதமடையாமல் இருப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசிலிக்கான் என்னும் ரசாயனக் கலவைப் பூச்சு பூசப்படுவது வழக்கம்.
சிலை அமைக்கப்பட்ட பின்னர் 3ஆவது முறையாக ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதற்கட்டமாக இரும்புக் கம்பிகள் தனிப் படகு மூலம் சிலை வளாகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சாரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
முழுப் பணிகளும் முடியும் வரை திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

