பிங்கல நிகண்டு: இயற்றியவர் பிங்கல முனிவர். தமிழ் மொழியில் உள்ள சொற்களின் பொருளை செய்யுள் வடிவில் விளக்கும் நூல்.
புறத்திரட்டு: தொகை நூலான இந்நூலில் பல நூல்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் உள்ளன. தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. இந்நூலில் அழிந்துபோன பல நூல்களின் பெயர்களும், பாடல்களும் இடம்பெற்றுள்ளன. முறையாகத் தொகுக்கப்பட்ட ஒரு தொகை நூல்.
புறநானூறு : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புறப்பொருள் பற்றிக் கூறும் நானூறு பாடல்களைக் கொண்டதால் "புறநானூறு' எனப் பெயர் பெற்றது. இதில் ஆண்பாற் புலவர்வர்களும் பெண்பாற் புலவர்களும் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பண்டைக்கால அரசர்கள், மக்கள், வள்ளல்கள் ஆகியோர் பற்றிய அரிய தகவல்களைத் தாங்கியுள்ளது.
புறப்பொருள் வெண்பாமாலை: இயற்றியவர் ஐயனாரிதனார். புறப்பொருள் பற்றி வெண்பாவில் அமைந்த பாக்களை உடையது. இந்நூலுக்கு உரை வகுத்தவர் சாமுண்டி தேவநாயனார் என்று ஒருசாராரும், மாகலூர்கிழான் என்றும் மற்றொரு சாராரும் கூறுவர். தமிழ்நாட்டு போர்முறைகளையும், வீரச்சிறப்புகளையும் விளக்கும் நூல்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

