சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கேரள மாநில முதல்வர் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

News image

கேரள முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

Updated On :14 ஜனவரி 2021, 10:53 pm

பொங்கல் பண்டிகையையொட்டி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.

பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சுட்டுரைப் பதிவில், “பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனப் பதிவிட்டுள்ளார்.