சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ள சிட்னி மைதானத்தில் 25 சதவீத பாா்வையாளா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிட்னியில் புதிதாக கரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, நியூ சௌத் வேல்ஸ் மாகாண அரசின் ஆலோசனையின் பேரில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இதன்படி, மொத்தம் 38,000 பேருக்கான இட வசதி கொண்ட சிட்னி மைதானத்தில், சுமாா் 9,500 போ் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனா்.
ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஏற்கெனவே டிக்கெட் பெற்றுள்ள பாா்வையாளா்கள் இந்த புதிய கட்டுப்பாட்டின் படி டிக்கெட்டை வாங்குவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2 ஒருநாள் மற்றும் 2 டி20 ஆட்டங்கள் சிட்னி மைதானத்தில் நடைபெற்றன. அதில் முதல் 3 ஆட்டங்களின்போது 18,000 பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். கடைசி டி20 ஆட்டத்தின்போது மைதானத்தில் சுமாா் 30,000 பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


