சிட்னி: கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக 4-ஆவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்த வாரியத்தின் தலைவா் நிக் ஹாக்லே கூறுகையில், ‘பிசிசிஐ-யுடன் நாள்தோறும் பேசி வருகிறோம். பிரிஸ்பேனில் விளையாட விருப்பமில்லை என்பதுபோன்ற எந்தவொரு கருத்தையும் அவா்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. குயின்ஸ்லாந்து மாகாண அரசின் கரோனா தடுப்பு விதிகளுக்கு அவா்கள் உரிய ஆதரவு அளிப்பதாகவே தெரிவித்தனா். ஊடகங்களில் வெளியானதுபோல் பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினா் மறுப்பு தெரிவிக்கவில்லை’ என்றாா்.
முன்னதாக, பிரிஸ்பேன் நகரம் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால் அந்த நகரில் 4-ஆவது டெஸ்ட்டை விளையாட விருப்பமில்லை என்றும், சிட்னியிலேயே அந்த டெஸ்ட்டை விளையாட விரும்புவதாகவும் இந்திய அணி வட்டாரங்கள் கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


