88-வது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவில், பழமையான ஹாக்கி தொடர்களில் ஒன்றாகக் கருதப்படும் முருகப்பா ஹாக்கிப் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இம்முறை, இந்திய ஸ்டீல் ஆணையம் மற்றும் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அணிகள் விளையாட உள்ளன.
10 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 2.5 லட்சம் ரொக்கம் பரிசளிக்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இப்போட்டி முதன்முதலாக, 1901-ம் ஆண்டு "மெட்ராஸ் சேலஞ்ச் கோப்பை' என்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரிவு "ஏ': இந்தியன் ஆயில், தெற்கு மத்திய ரயில்வே, ராணுவ லெவன், இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை, இந்திய ஓவர்சீஸ் வங்கி.
பிரிவு "பி': ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பஞ்சாப் தேசிய வங்கி, இந்திய ஸ்டீல் ஆணையம், இந்திய வங்கி.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

