முதலாவது இந்திய பாட்மிண்டன் லீக் போட்டியில் சாய்னா நெவால் தலைமையிலான ஹைதராபாத் ஹாட்ஷாட்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் சிந்துவின் அவாத் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தியாவில் கிரிக்கெட் லீக் போட்டி மிகவும் பிரபலமடைந்தது, இதையொட்டி, அதே வடிவில் பாட்மிண்டன் போட்டியையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து முதலாவது பாட்மிண்டன் லீக் போட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளின் முடிவில் ஹைதராபாத் அணியும், லக்னெü அணியும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.
அவாத் வாரியர்ஸýக்கு சிந்து கேப்டனாகச் செயல்பட்டார். இந்தப் போட்டி மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியின் முதல் ஆட்டமான ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவாத் வாரியர்ஸ் அணியின் ஸ்ரீகாந்த் 21-12, 21-20 என்ற நேர் செட்களில் ஹைதராபாதின் தனோங்சக்கை வீழ்த்தினார். இதனால் லக்னெü அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.
சாய்னா-சிந்து: மகளிர் ஒற்றையப் பிரிவில் இந்தியாவின் பாட்மிண்டன் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் ஹைதராபாதின் சாய்னாவும், லக்னெüவின் சிந்துவும் மோதினர். லீக் ஆட்டத்தின் சாய்னாவிடம் பெற்ற தோல்விக்கு சிந்து தக்க பதிலடி தருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சாய்னாவின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு சிந்துவால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில் 21-15, 21-7 என்ற நேர் செட்களில் சாய்னா வென்றார். இதனால் 1-1 என்று புள்ளிகள் கணக்கு சமநிலையை எட்டியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஹைதராபாதின் கோ வி ஷெம்- வா லிம் கிம் ஜோடி 21-14, 13-21, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் சாய்னா அணி 2-1 என்று முன்னிலை பெற்றது.
பரபரப்பான ஆட்டம்: 3 ஆட்டங்களில் ஹைதராபாத் முன்னிலை பெற்றதால், 4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பரபரப்பு அதிகம் காணப்பட்டது.
இதில், ஹைதராபாதின் அஜய் ஜெய்ராமும், லக்னெüவின் குரு சாய் தத்தும் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 10-21 என்ற கணக்கில் குரு சாய் தத்தும், 2-வது செட்டை 21-17 என்ற கணக்கில் ஜெய்ராமும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஜெய்ராம் 11-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதனால் ஹைதராபாத் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று பாட்மிண்டன் லீக் கோப்பையை கைப்பற்றியது.
தொடர் நாயகி சாய்னா!
இந்த லீக் போட்டியில் தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சாய்னா வெற்றி பெற்றார். இதனால் அவர், தொடர் நாயகி விருதைப் பெற்றார். கோப்பையைக் கைப்பற்றியது குறித்து அவர் கூறுகையில், "இத்தொடர் முழுவதும் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிர்ஷ்டவசமாக இத்தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றேன். சிந்துவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. முதலாவது பாட்மிண்டன் லீக் கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரீமியர் லீக் போட்டியைப் போல, விரைவில் பாட்மிண்டன் லீக் போட்டியும் ஜொலிக்கும்' என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


