சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாநில பாட்மிண்டன்: சென்னை வீரர்கள் வெற்றி

தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த வி.வேலவன், எம்.ஆர். மணிகண்டன் ஜோடி வெற்றி பெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 1:13 pm

தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த வி.வேலவன், எம்.ஆர். மணிகண்டன் ஜோடி வெற்றி பெற்றது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் ஏ.யோகிதா, மதுரை எஸ்.கேஷ்மா ஜோடி வெற்றி பெற்றது.

தருமபுரி மாவட்ட இறகுப் பந்து அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டிகள் தருமபுரி மாவட்ட உள்விளையாட்டரங்கில் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை அரையிறுதிப் போட்டியும், தொடர்ந்து இறுதிப் போட்டியும் நடைபெற்றன.

ஒற்றையர் பிரிவு: ஆடவருக்கான ஒற்றையர் இறகுப் பந்து இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த வி.வேலவன், ஆதித்யா இளங்கோ விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வி.வேலவன் 20-22, 21-13, 21-11 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் சென்னையைச் சேர்ந்த அதிதி ஆனந்த் 21-13, 21-19 என்ற புள்ளிக கணக்கில் மதுரையைச் சேர்ந்த ஏ.யோகிதாவைத் தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவு: கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் வேலூர் ரீகான், ஜே.அனீஸ் கவுசர் ஜோடி சென்னையைச் சேர்ந்த விஜய் அலோசீஸ், கே.சுனேரி ஜோடியை 21-15, 21-19 புள்ளிக் கணக்கில் வென்றனர்.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, கோப்பையை தருமபுரி ஏ.எஸ்.பி. கல்யாண் வழங்கினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஓய்வு பெற்ற மண்டல முதுநிலை மேலாளர் சி.கிருபா தலைமை வகித்தார்.