மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் முதல்முறையாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஜெர்மனியின் மான்செங்கிளாட்பச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் தன்னைவிட முன்னிலையில் உள்ள ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கோல் அடித்த ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவின் மோனிகா கோலடிக்க, இரு அணிகளும் சமநிலையை எட்டின.
இதன்பிறகு 30-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்த ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் 34-வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்நீத் கெüர் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டின.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் கேத்தரியாவும் (41-வது நிமிடம்), ரீது ராணியும் (48-வது நிமிடம்) கோலடிக்க, இந்தியா 4-2 என்ற கணக்கில் வெற்றி கண்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

