சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தெற்கு ஆசிய கால்பந்து: முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி

16-வயதுக்குட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Updated On :22 ஜூலை 2013, 6:34 am

16-வயதுக்குட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2011-ம் ஆண்டில் இருந்து நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி காத்மாண்டுவில் உள்ள ராணுவ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குரூப் "பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும், இலங்கையும் மோதின. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், முதல் பாதியில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 புள்ளிகளைப் பெற்றது.

இந்தியத் தரப்பில் பெதாஷ்வர் சிங் (23-வது நிமிடம், 88-வது நிமிடம்) இரு கோல்களையும், கிருஷ்ணா பண்டிட் (21-வது நிமிடம்) மற்றும் சக்ரவர்த்தி (66-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.

2011-ம் ஆண்டில் நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.