16-வயதுக்குட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2011-ம் ஆண்டில் இருந்து நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி காத்மாண்டுவில் உள்ள ராணுவ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குரூப் "பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும், இலங்கையும் மோதின. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால், முதல் பாதியில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 புள்ளிகளைப் பெற்றது.
இந்தியத் தரப்பில் பெதாஷ்வர் சிங் (23-வது நிமிடம், 88-வது நிமிடம்) இரு கோல்களையும், கிருஷ்ணா பண்டிட் (21-வது நிமிடம்) மற்றும் சக்ரவர்த்தி (66-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.
2011-ம் ஆண்டில் நடைபெற்ற தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

