சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உலகக் கோப்பை கராத்தே: கிரீஸில் தொடங்கியது

உலகக் கோப்பை கராத்தே போட்டி கிரீஸில் உள்ள கோர்ஃபு நகரில் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :2 ஜூலை 2013, 10:14 am

உலகக் கோப்பை கராத்தே போட்டி கிரீஸில் உள்ள கோர்ஃபு நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இப்போட்டி வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் 8 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டுள்ளது.

இதற்காக, இந்திய கராத்தே சம்மேளன பொதுச்செயலர் பரத் சர்மா தலைமையில் இந்திய அணி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியை அகில இந்திய கராத்தே சம்மேளனத் தலைவர் ஆர்.தியாகராஜன் அறிவித்தார்.

வீரர்கள் விவரம்: அர்கோ சாட்டர்ஜி, பிரணாய் சர்மா, ஹர்ஷித் கோயல், கர்ல் வட்சா மற்றும் ராகுல். பயிற்சியாளர்கள்: விர்ஃப் வட்சா, அங்கித் குப்தா.