சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பஞ்சாபில் உலகக் கோப்பை கபடி

உலகக் கோப்பை கபடிப் போட்டி வரும் நவம்பர் மாதம் பஞ்சாபில் நடைபெறவுள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 5:38 am

உலகக் கோப்பை கபடிப் போட்டி வரும் நவம்பர் மாதம் பஞ்சாபில் நடைபெறவுள்ளது.

ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் நடைபெறும் உலகக் கோப்பை கபடி, இப்போது 4-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதில் 25 நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு இல்லாத அளவுக்கு பரிசுத்தொகையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில தகவல், மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா கூறியது: கபடிக்கு உலகத்தர அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து மேலும் பல நாடுகளை இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கச் செய்ய பஞ்சாப் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ரூ.96 கோடி செலவில் சர்வதேச தரத்திலான கபடி மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 மைதானங்களை

அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விளையாட்டுத் துறையை மேம்படுத்த பஞ்சாப் மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு சாதனங்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.