உலகக் கோப்பை கபடிப் போட்டி வரும் நவம்பர் மாதம் பஞ்சாபில் நடைபெறவுள்ளது.
ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் நடைபெறும் உலகக் கோப்பை கபடி, இப்போது 4-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. இதில் 25 நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு இல்லாத அளவுக்கு பரிசுத்தொகையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில தகவல், மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியா கூறியது: கபடிக்கு உலகத்தர அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து மேலும் பல நாடுகளை இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கச் செய்ய பஞ்சாப் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ரூ.96 கோடி செலவில் சர்வதேச தரத்திலான கபடி மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 மைதானங்களை
அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விளையாட்டுத் துறையை மேம்படுத்த பஞ்சாப் மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு சாதனங்களும் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

