கால்பந்துப் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்ட லெபனான் நாட்டைச் சேர்ந்த நடுவர் அலி சபாக்குக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அலி சபாக் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏஎஃப்சி கோப்பை கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால்-தம்பின் ரோவர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடுவர் அலி சபாக், லைன் மேன்கள் அலி ஈத், அப்துல்லா தலீப் ஆகியோர் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய உடன்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போட்டிக்கு முன்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். வேறு நடுவர், லைன் மேனை வைத்து போட்டி நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த மூவரும், சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு இருப்பதையும், மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய உடன்பட்டதையும் ஒப்புக் கொண்டனர். இந்த வழக்கில் நடுவர் அலி சபாக்குக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
லைன்மேன்கள் இருவருக்கும் ஏற்கெனவே 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

