பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒருநாள் ஆட்டத்தை டெஸ்ட் போட்டி போல விளையாடுகின்றனர் என்று அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேலியாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தில் 235 என்ற வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த ஆட்டத்தில் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் (55 ரன்கள்), நசீர் ஜாம்ஷெட் (42 ரன்கள்) ஆகியோர் மட்டுமே குறிப்பிடத்தக்க ரன்களை எடுத்தனர். முன்வரிசை வீரர்கள் இம்ரான் ஃபர்கத், முகமது ஹஃபீஸ், சோயிப் மாலிக், கம்ரான் அக்மல் ஆகியோர் இரு ஆட்டங்களிலும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
வீரர்களின் மோசமான ஆட்டம், அணியின் தொடர் தோல்விகளால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பாகிஸ்தான் வீரர்களின் பேட்டிங் குறித்து கருத்துத் தெரிவித்த அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ், "பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஒருநாள் போட்டியை டெஸ்ட் போட்டி போலவும், டெஸ்ட் போட்டிகளில் ஒருநாள் ஆட்டத்தைப் போலவும் விளையாடத் தொடங்கியுள்ளனர். பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அவர்களது பதற்றம் அதிகரிப்பது ஏன் என்பது தெரியவில்லை. சிறந்த பேட்டிங் பயிற்சியாளரை நியமிக்க வேண்டியது அவசியம்' என்றார்.
முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தெüசிஃப் அகமது கருத்துத் தெரிவிக்கையில், "பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தைரியத்தை இழந்துவிட்டனர். பந்துகளை எதிர்கொண்டு களத்தில் தாக்குப்பிடிக்கவே அவர்கள் சிரமப்படுகின்றனர்'
என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

