கோவையில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் தர வரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் சித்தார்த் ராவத் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
கோவை புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமியுடன் கோவை டென்னிஸ் சங்கம் இணைந்து ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியை நடத்துகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி முடிவுகள்:
தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் 6-2, 6-1 என்ற நேர் செட்டுகளில் சக வீரர் வினோத் ஸ்ரீதரையும், இந்தியாவின் கருண்தேவ் சிங் 6-3, 6-1 என்ற நேர் செட்டுகளில் சகவீரர் தருண் நாத் சூரத்தையும் எளிதில் வென்றனர்.
தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவின் விஜயானந்த் மாலிக் 6-4, 6-2 என்ற நேர் செட்டுகளில் சக வீரர் அபிஜித் திவாரியையும், இந்தியாவின் பாரிக் முகமத் 6-2, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி, தர வரிசையில் 6-ஆவது இடத்தில் உள்ள சக வீரர் சித்தார்த் ராவத்தையும் வென்றார்.
தைவானின் ஜூய் சென் ஹூங் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேக் இட்ஸ்டெயினையும், தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள இந்தியாவின் விக்னேஷ் பெரணமல்லூர் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் குமார பி.ஆதவெளியையும், அஜய் செல்வராஜ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சாகர் அகுஜாவையும்
வென்றனர்.
இந்தியாவின் அப்துல்லா ஷேக் 6-0 என்ற கேம் கணக்கில் சூரஜ் பேணிவாலை வென்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் 3-0 என்ற கேம் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது சூரஜ் பேணிவால் ஆட்டத்தில் இருந்து விலகியதையடுத்து அப்துல்லா ஷேக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்
பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

