சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: முதல் சுற்றில் போராடி வென்றார் சாய்னா

இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியான இந்திய வீராங்கனை சாய்னா நெவால் கடுமையாகப் போராடி வென்றார்.

Updated On :12 ஜூன் 2013, 5:40 am

இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியான இந்திய வீராங்கனை சாய்னா நெவால் கடுமையாகப் போராடி வென்றார்.

சர்வதேச தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சாய்னா, 14-வது இடத்தில் உள்ள இந்தோனேஷிய வீராங்கனை லின்டாவினி ஃபனிட்ரியை எதிர்கொண்டார்.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சாய்னாவுக்கு கடும் சவாலை அளித்தார் ஃபனிட்ரி. ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முதல் செட் தொடக்கத்தில் ஃபனிட்ரி 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் சாய்னாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இறுதியில் 21-17 என்ற கணக்கில் முதல் செட்டை சாய்னா வென்றார். எனினும் இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய ஃபனிட்ரி 29-27 என்ற கணக்கில் அதனை வென்றார்.

எனினும் இறுதி செட்டை 21-13 என்ற கணக்கில் சாய்னா கைப்பற்றி ஆட்டத்தில் வெற்றி பெற்றார். இப்போட்டித் தொடரில் 3 முறை பட்டம் வென்றுள்ள சாய்னாவுக்கு முதல் சுற்றே கடும் சவாலாக அமைந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தருண் கோனா-அஸ்வின் பொன்னப்பா ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.