நார்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியின் 3-வது சுற்றில் ஆனந்த் வெற்றி கண்டுள்ளார்.
10 பேர் பங்கேற்றுள்ள 9 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியின் 3-வது சுற்றில் பல்கேரியாவின் வேஸலின் டோபலோவை 41-வது நகர்த்தலில் வீழ்த்திய ஆனந்த், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆனந்த்-டோபலோவ் இடையிலான இந்த ஆட்டம், 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது. 2010 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் இருவரும் மோதினர். அதில் ஆனந்த் வெற்றி கண்டார். அந்தத் தோல்வியில் இருந்து மீளமுடியாத டோபலோவ், இப்போது மீண்டும் ஆனந்திடம் தோல்வி கண்டுள்ளார்.
அதேநேரத்தில் ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 3-வது சுற்றில் சீனாவின் வாங் ஹாவை வீழ்த்தினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்த கர்ஜாகின் 3 புள்ளிகளுடன் தனி முன்னிலை பெற்றார்.
அஜர்பைஜானின் டெய்மர் ரட்ஜபவ், நார்வேயின் மாக்னெஸ் கார்ல்ùஸன், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர் ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளனர்.
சீனாவின் வாங் ஹாவ், டோபலோவ் ஆகியோர் தலா 1 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், நார்வேயின் லத்விக் ஹமர் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் உள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

