மலேசிய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் பி.வி.சிந்து 21-13, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் செனா ஜியாவூனை தோற்கடித்தார். வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஹாங்காங்கின் சியூங் நகனை சந்திக்கிறார் சிந்து.
3-வது சுற்றில் குருசாய் தத்: ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் குருசாய் தத் 21-8, 21-9 என்ற நேர் செட்களில் மலேசியாவின் கியான் ஜின் கோவையும், சமீர் வர்மா 21-15, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வெய் ஃபெங் சாங்கையும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
இதேபோல் இந்தியாவின் ஸ்ரீகாந்தும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் 2-வது சுற்றில் 21-9, 21-19 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சுப்பான்யூவை தோற்கடித்தார். அதேநேரத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 21-15, 14-21, 15-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜைனுதீனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

