நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், அரவிந்த் பட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய (3-வது) சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்றில் அஜய் ஜெயராம் 24-22, 21-5 என்ற நேர் செட்களில் நார்வேயின் மரியஸ் மிர்ரையும், இந்தியாவின் அரவிந்த் பட் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் சகநாட்டு வீரரான கிர்தேஷ் தின்ட்வாலையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். 3-வது சுற்றில் அஜய் ஜெயராம், தென் கொரியாவின் ஜி ஹூன் ஹிங்கையும், அரவிந்த் பட், இந்தோனேசியாவின் ஆன்ட்ரேவையும் சந்திக்கின்றனர்.
மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் குருசாய் தத், ஆனந்த் பவார், சேதன் ஆனந்த் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாரதா ஜஸ்தி 21-18, 17-21, 17-21 என்ற நேர் செட்களில் நியூஸிலாந்தின் விக்கி கோப்லேன்டிடம் தோல்வி கண்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

