தென் மண்டல அளவிலான அட்டயா பட்டயா போட்டியில் தமிழக ஆடவர் அணியினர் வெள்ளிக் கோப்பை வென்றனர். இப்போட்டியின் மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
முதலாவது தென் மண்டல அட்டயா பட்டயா சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதிச்சுற்றில் புதுச்சேரி அணியுடன் மோதியது தமிழக அணி. இதில், 39-19, 36-30 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணி தோல்வியைத் தழுவி வெள்ளிக் கோப்பை வென்றது. தமிழக அணியின் கேப்டன் சிவசுப்பிரமணியன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, பூடானில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள தெற்கு ஆசிய அட்டயா பட்டயா சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், மகளிர் பிரிவு போட்டியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆந்திர அணியை தமிழக அணி எதிர்கொண்டது. இதில், 18-10, 14-8 என்ற கணக்கில் தமிழக அணி வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

