வங்கதேசத்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்கதேச அணி, இலங்கை அணியுடன் இருபது ஓவர் ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மோதியது. இந்த ஆட்டம் பல்லகலே நகரில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக, அந்த அணியின் தொடக்க வீரர் பெரேரா 44 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக மெண்டிஸ் 37 ரன்களும், மேத்யூஸ் 30 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய வங்கதேச அணி, இலங்கை அணி பந்து வீச்சாளர்களுக்கு சவால்விடும் விதமாக விளையாடினர். இதனால், வெற்றி இலக்கான 198 ரன்களை வங்கதேச அணி எட்டி விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
64 ரன்கள் எடுத்த பெரேரா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி இருபது ஓவர் கோப்பையை வென்றது. முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தொடரை வென்றிருந்தது. அதேசமயம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

