சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்குகிறது.
இப்போட்டியின் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நெவால் மீண்டும் பட்டத்தைக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இம்முறை அவர் வெற்றி பெற்றால், தொடர்ந்து 3 முறை இப்பட்டத்தைக் கைப்பற்றிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுவார்.
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் தொடங்கும் இப்போட்டியில் சாய்னா நெவால் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
சமீபத்தில் ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் தோல்வியுற்ற சாய்னா, ஸ்விஸ் பட்டத்தை வென்று ஆறுதலடைவார் என்று தெரிகிறது.
சாய்னா, தனது முதல் ஆட்டத்தில் பிரான்ஸின் சஷினா விக்னெஸ் வாரனை எதிர்கொள்கிறார். இப்போட்டியின் காலிறுதி ஆட்டம் வரை சாய்னா தடை ஏதுமின்றி எளிதாக முன்னேறி விடுவார். ஆனால், காலிறுதி ஆட்டத்தில் அவருக்கு சவால் காத்துள்ளது. இந்த ஆட்டத்தில் அவர், சீனா தைபேவின் டுஸý யிங் டாய் என்ற வீராங்கனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில், சீனாவின் ஷிக்ஸியான் வாங் மற்றும் தாய்லாந்தின் ரட்சனொக் இன்டனான் உள்ளிட்ட வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

