சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மல்யுத்தம் நீக்கப்பட்ட விவகாரம்: மக்களவையில் ஜிதேந்திர சிங் பதில்

மல்யுத்தத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மத்திய

Updated On :12 மார்ச் 2013, 6:34 am

மல்யுத்தத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

"ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 70 நாடுகளும் மல்யுத்த விவகாரம் குறித்து பிரச்னையை கையிலெடுக்க வேண்டும். அதற்காக அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை ஈடுபடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும், என்று ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

மக்களையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.

"2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தை மீண்டும் சேர்ப்பதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழமையான விளையாட்டான மல்யுத்தம் நீக்கப்பட்டது எந்த அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று அரசு நன்கு உணர்ந்துள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலிருந்து மல்யுத்த விளையாட்டை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சமீபத்தில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.