மதுரையில் நடைபெற்று வரும் தென் மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் 2-வது நாளான வெள்ளிக்கிழமை தமிழக ஆடவர், மகளிர் அணிகள் ஆதிக்கம் செலுத்தின.
தென் மண்டல அளவிலான ஆடவர், மகளிர் ஹேண்ட்பால் போட்டி மதுரை நாகசிவா பாலிடெக்னிக் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. லீக் முறையில் நடைபெறும் இப் போட்டியின் 2-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு ஆட்டங்களில் தமிழகம் 35-14 என்ற கணக்கில் ஆந்திரத்தையும், கர்நாடகம் 34-17 என்ற கணக்கில் கேரளத்தையும், ஆந்திரம் 27-21 என்ற கணக்கில் புதுச்சேரியையும், தமிழகம் 37-31 என்ற கணக்கில் கேரளத்தையும், கர்நாடகம் 43-14 என்ற கணக்கில் ஆந்திரத்தையும் வீழ்த்தின.
மகளிர் பிரிவில் தமிழகம் 12-5 என்ற கணக்கில் ஆந்திரத்தையும், கேரளம் 18-6 என்ற கணக்கில் கர்நாடகத்தையும், தமிழகம் 12-7 என்ற கணக்கில் கர்நாடகத்தையும் வீழ்த்தின.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

