துபை டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி-பிரான்ஸின் மைக்கேல் லோட்ரா ஜோடி முன்னேறியுள்ளது.
துபையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் பூபதி-லோட்ரா ஜோடி 6-4, 6-7 (2), 10-5 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பூபதி ஜோடி 6-4 என்ற கணக்கில் எளிதாக வென்றது. பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் இரு ஜோடிகளும் அபாரமாக ஆடியதால் அந்த செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி அந்த செட்டை 7-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றியது.
பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் டைபிரேக்கர் செட்டை பூபதி ஜோடி 10-5 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றியது.
பூபதி-லோட்ரா ஜோடி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஸ்வீடனின் ராபெர்ட்டா வின்ஸ்டெட்-செர்பியாவின் நீனாட் ஜிமோன்ஜிக் ஜோடியை சந்திக்கிறது. முன்னதாக ராபெர்ட்டா-ஜிமோன்ஜிக் ஜோடி தங்களின் அரையிறுதிச் சுற்றில் 7-6 (2), 7-6 (2) என்ற நேர் செட்களில் ரஷியாவின் மிகெய்ல் யூஸ்னி-இஸ்ரேலின் ஜொனாதன் எர்லிக் ஜோடியை வீழ்த்தியது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

