இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவுக்கு திங்கள்கிழமை வந்தனர்.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரண்டாவது ஒருநாள் போட்டி 3ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் விளையாட, சென்னையிலிருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் வீரர்கள் கொல்கத்தாவை அடைந்தனர். பலத்த பாதுகாப்புடன் ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியினர் ஈடன் கார்டன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அணியின் மேலாளர் தெரிவித்தார்.
2ஆவது ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் நடைபெறவுள்ளது.
தோனி, பிளெட்சர் வருகை: இந்திய அணியின் கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெட்சர், ரவீந்திர ஜடேஜா மற்றும் அசோக் திண்டா ஆகியோரும் திங்கள்கிழமையே கொல்கத்தா வந்தடைந்தனர். அணியின் மற்ற வீரர்கள் செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவுக்கு வருவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


