இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக விரும்புவதாக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இப்போது பயிற்சியாளராக உள்ள டங்கன் பிளெட்சரின் ஒப்பந்த காலம் 2013ஆம் ஆண்டு மார்ச்சுடன் நிறைவடைய உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனால், அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்று தெரிகிறது.
இதனால், அவருக்குப் பதிலாக புதுப்பயிற்சியாளர் இந்திய அணிக்கு நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, "இந்தியாவில் திறமையான பயிற்சியாளர்கள் உள்ளனர். அணிக்கு இந்தியப் பயிற்சியாளர் தேவை. இந்தியர் ஒருவரை பயிற்சியாளராக நியமிப்பதற்கான தருணம் இப்போது வந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு தான் பயிற்சியாளராக வேண்டும் என்று விரும்பியே கங்குலி இவ்வாறு தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


