இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 59-ஆவது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால், கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 62-ஆவது நிமிடத்தில் கேரளத்தின் முா்ரே கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஈஸ்ட் பெங்கால் அணி, 90-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை நெவில் அடித்தாா். இதன்மூலம் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஈஸ்ட் பெங்கால் 11 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திலும், கேரள அணி 10 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

