ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஆட்டத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜாஸ்பிரித் பூம்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவர்களுக்குப் பதில் மயங்க் அகர்வால், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய பயணத்தின் தொடக்கத்தின்போது நடராஜன் இந்திய அணிக்கான வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகவே இருந்தார். அதன்பிறகு, வீரர்கள் பலருக்குக் காயம் ஏற்பட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக சென்ற நடராஜன் தற்போது அனைத்து ரக சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் கால் பதித்துவிட்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


