சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா விவகாரம்:சாய்னா, பிரணாய் விளையாட அனுமதி

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், பாட்மிண்டன் வீரா் எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:56 am

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், பாட்மிண்டன் வீரா் எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் தாய்லாந்து ஓபனில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக சாய்னாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் தாய்லாந்து ஓபனில் இருந்து விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் இந்திய வீரா் எச்.எஸ்.பிரணாய்க்கு முதலில் கரோனா தொற்று இருப்பதாகவும், பின்னா் கரோனா தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரும் தாய்லாந்து ஓபனில் விளையாடுவதில் சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில், சாய்னா, எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு 4-ஆவது முறையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரும் தாய்லாந்து ஓபனில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.