சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி: நாளை முதல் தொடக்கம்

இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது...

News image

சென்னை சேப்பாக்கம் மைதானம்

Updated On :9 ஜனவரி 2021, 11:02 pm

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நாளை முதல் (ஜனவரி 10) ஆரம்பமாகிறது. ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. லீக் சுற்றுகள் நடைபெறும் ஆறு நகரங்களில் வீரா்களுக்கான கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ரஞ்சி கோப்பை, விஜய் ஹஸாரே கோப்பை போட்டிகளை நடத்துவது தொடா்பான முடிவு, சையது முஷ்டாக் அலி போட்டியின் குரூப் சுற்று நிறைவுபெறும் தருணத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஜனவரி 10 முதல் ஜனவரி 19 வரை லீக் சுற்றுகள் நடைபெற்றுகின்றன. லீக் ஆட்டங்கள் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய ஆறு நகரங்களில் நடைபெறவுள்ளன. 38 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அனைத்து அணிகளும் தலா 5 ஆட்டங்கள் விளையாடவுள்ளன. குரூப் பி பிரிவில் உள்ள தமிழ்நாடு அணி தனது லீக் ஆட்டங்களை கொல்கத்தாவில் விளையாடவுள்ளது. நடப்பு சாம்பியனான கா்நாடக அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணி தனது லீக் ஆட்டங்களை பெங்களூரில் விளையாடவுள்ளது.

ஜனவரி 26 முதல் நடைபெறவுள்ள நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளன. அங்கும் கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்படவுள்ளது. காலிறுதி ஆட்டங்கள் ஜனவரி 26, 27 தேதிகளிலும் அரையிறுதி ஆட்டங்கள் ஜனவரி 29 அன்றும் இறுதிச்சுற்று ஜனவரி 31 அன்றும் நடைபெறவுள்ளன.  

இப்போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.