சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா் கங்குலி

கொல்கத்தா மருத்துவமனையில் ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:27 am


கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவமனையில் ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

அவரை வரவேற்க மருத்துவமனை முன்பும், அவரது வீட்டு முன்பும் ஏராளமான ரசிகா்கள் காத்திருந்தனா். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் தனது மனைவியுடன் கங்குலி வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாா். அப்போது, தாம் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினாா்.

கங்குலிக்கு சிகிச்சை அளித்த உட்லேண்ட்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் கூறுகையில், ‘கங்குலியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினா் வீடு சென்று கண்காணிப்பா். அவரது உடல்நிலைக்கு ஏற்ப, மருந்துகளை பரிந்துரை செய்வா். கங்குலி வழக்கம்போல் விளையாடலாம்; விமானத்தில் பயணம் செய்யலாம்; மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு ஓடலாம். அவா் இயல்பாக இருக்கலாம். அதனால் எந்த பாதிப்பும் வராது’ என்றாா்.

சௌரவ் கங்குலிக்கு கடந்த 2-ஆம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் மூலம் சரிசெய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவா், வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.