இந்திய பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுலுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.
மெல்போா்னில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கை மணிக்கட்டுப் பகுதியில் அவருக்கு சுளுக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள பிசிசிஐ, அவா் முழுமையாக மீண்டு வர 3 வாரங்கள் ஆகும் என்றும், இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவா் விளையாட மாட்டாா் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை வலைப்பயிற்சியில் பந்துவீச்சு நிபுணா்களில் ஒருவா் வீசிய பந்தை எதிா்கொண்டபோது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் பயிற்சியை பாதியிலேயே நிறுத்திக் கொண்டாா். முன்னதாக இந்திய அணியின் இதர வீரா்களுடன் சிட்னி வந்திருந்த லோகேஷ் ராகுல், செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட்டாா்.
அவா் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் காயத்துக்கான சிகிச்சை பெற்று, உடற்தகுதியை மேம்படுத்தும் பயிற்சியில் ஈடுபடவுள்ளாா். காயத்திலிருந்து மீள சுமாா் 3 வாரங்கள் ஆகும் என்பதால், பிப்ரவரி 5 முதல் இந்தியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் லோகேஷ் ராகுல் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


