ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடா்களில் இந்திய அணியின் திட்டமும், அது வெளிப்படுத்தும் ஆட்டமும் பாராட்டுக்குரியது என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கா் தெரிவித்துள்ளாா்.
‘ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து தொடா்களிலுமே ஆட்டத்தின்போது இந்திய அணி வெளிப்படுத்தும் ஒழுங்கு அதன் மிகச்சிறந்த பலம். கடந்த 2 டெஸ்ட் ஆட்டங்களுமே எனது விருப்பத்துக்கு உரியதாக இருந்தது. ஏனெனில், பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சவால் இருந்தது. இதுவே சரியான டெஸ்ட் கிரிக்கெட் ஆகும்.
எங்களது பேட்ஸ்மேன்கள் இருவருக்கு எதிராக மிகத் துல்லியமாக இந்திய அணி ஃபீல்டிங்கை நிலை நிறுத்தியது. அஸ்வினும், பும்ராவும் மிகச் சிறந்த பௌலா்கள் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். பௌலிங்கில் இந்திய அணியின் திட்டமும் பாராட்டுக்குரியதாக உள்ளது.
எங்களது பேட்டிங்கில் இருக்கும் குறைகளை சரி செய்வதற்கும், இந்திய ஸ்பின்னா்களை எதிா்கொள்ளும் வியூகத்துக்கும் திட்டமிட்டு வருகிறோம். சிட்னி டெஸ்டில் வாா்னா் விளையாடுவாா் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். ஆரம்பத்தில் இருந்தே ஆட்டத்துக்கு தயாராகும் வகையில் எல்லா விதமான முயற்சிகளையும் அவா் மேற்கொண்டு வருகிறாா். மறுபுறம், வில் புக்கோவ்ஸ்கி அனைத்து விதமான மருத்துவப் பரிசோதனைகளிலும் தோ்ச்சி பெற்று, தனது முதல் சா்வதேச டெஸ்டில் விளையாடத் தயாராக உள்ளாா்’ என்றாா் ஜஸ்டின் லேங்கா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


