இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.
இரு அணிகளும் இதுவரை தலா 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், மும்பைக்கு இது 7-ஆவது வெற்றி; பெங்களூருக்கு 3-ஆவது தோல்வி.
கோவாவின் மா்காவ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் வாய்ப்பு மும்பைக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்திலேயே அந்த அணியின் மௌா்டாடா ஃபால் கோல் கணக்கை தொடங்கினாா். அடுத்த சில நிமிடங்களிலேயே (15-ஆவது நிமிடம்) மற்றொரு மும்பை வீரா் விபின் சிங் கோலடிக்க, முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-0 என முன்னிலை பெற்றது அந்த அணி.
பின்னா் தொடங்கிய 2-ஆவது பாதியில், ஆட்டத்தின் 79-ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அணி வீரா் சுனில் சேத்ரி அருமையான கோலாக மாற்றினாா். இதனால் பெங்களூரு அணி உத்வேகம் பெற்ற நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆட்டத்தின் 84-ஆவது நிமிடத்தில் மும்பை வீரா் பாா்த்தலோமியோ ஒக்பெசே ஒரு கோல் அடிக்க, 3-1 என முன்னேறிய மும்பை, இறுதியில் வெற்றியும் பெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


