தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
2020 ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான தில்லி கேபிடல்ஸ் அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தை அடைந்தது.
இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2014-19 வரை தில்லி கேபிடல்ஸ் அணியின் திறமைகளைக் கண்டறியும் குழுவின் தலைவராக இருந்தார்.
பிரவீன் ஆம்ரே, இந்திய அணிக்காக 11 டெஸ்டுகள், 37 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மும்பை அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி மூன்று ரஞ்சி கோப்பைகளை வெல்ல உதவியுள்ளார்.
இந்தியத் திறமைகளைக் கொண்டது எங்கள் அணி. பயிற்சியாளர் தேர்விலும் அதையே கடைப்பிடிக்கிறோம். ஆம்ரே அளவுக்கு இந்திய உள்ளூர் கிரிக்கெட் பற்றி அறிந்தவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள். ஷ்ரேயஸ், ரிஷப் பந்த், பிரித்வி ஷா ஆகியோர் தில்லி அணிக்குத் தேர்வாக முக்கியக் காரணமாக ஆம்ரே இருந்துள்ளார். அவருடைய அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும் என தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி திராஜ் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


