இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.
இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றிருந்த கே.எல். ராகுல், காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். மெல்போர்னில் கடந்த சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டபோது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராகுலால் டெஸ்ட் தொடரில் இடம்பெற முடியாது என பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. காயமடைந்துள்ள ராகுல், பெங்களூருக்குத் திரும்பி அங்குள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் காயத்துக்குச் சிகிச்சை பெறவுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


