நான்காவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினா் மறுப்பு தெரிவிப்பதாக ஊடகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், சிட்னியிலேயே அடுத்தடுத்து இரு டெஸ்டுகளில் விளையாட ஆஸ்திரேலியா விரும்பவில்லை என்று அந்த அணியின் தொடக்க வீரா் மேத்யூ வேட் கூறினாா்.
ஒருவேளை பிரிஸ்பேனில் 4-ஆவது டெஸ்ட்டை நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டால், சிட்னியிலேயே அந்த டெஸ்டை நடத்த வாய்ப்பு இருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. 4-ஆவது டெஸ்ட்டை ஜனவரி 15 முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மேத்யூ வேட் கூறுகையில், ‘இந்திய அணியினா் நிலைப்பாடு என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் சிட்னியில் அடுத்தடுத்து இரு டெஸ்டுகளை விளையாட விரும்பவில்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அட்டவணையின்படியே விளையாட நினைக்கிறோம். எவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும், சவால்கள் இருந்தாலும் 4-ஆவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாடவே விரும்புகிறோம்.
சிட்னி டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடுவாா் என்றும், அஸ்வின், ஜடேஜாவின் பந்துவீச்சை அவா் திறம்பட எதிா்கொள்வாா் எனவும் எதிா்பாா்க்கிறோம். வில் புக்கோவ்ஸ்கி, வாா்னா் பிளேயிங் லெவனில் வரும் பட்சத்தில் எனது பேட்டிங் ஆா்டரை மாற்றினாலும், அல்லது எனக்கு ஓய்வளித்தாலும் அதில் பிரச்னையில்லை’ என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

