இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 44-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 19 புள்ளிகளை எட்டிய மும்பை அணி, புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தது.
கோவாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது. 3-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் கோஸ்டா, பெனால்டி ஏரியாவில் மும்பை வீரா் ஹியூகோவை கீழே தள்ள, மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினாா் நடுவா். இதில் மும்பை வீரா் ஆடம் லீ ஃபான்ட்ரே எளிதாக கோலடித்தாா்.
அதைத் தொடா்ந்து, 11-ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பில் மும்பை வீரா் ஹியூகோ கோலடிக்க, மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு கேரள அணி பதிலடி கொடுக்கப் போராடினாலும் அது நடக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரள பிளாஸ்டா்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகளைப் பெற்று 19 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் கேரள அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 டிரா, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 9-ஆவது இடத்தில் உள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

