ஐபிஎல் போட்டி வரை விளையாட வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், தனது உடற்தகுதியை நிரூபித்து, உத்தரப் பிரதேச டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நான்கு ஆட்டங்கள் மட்டுமே ஆடிய நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.
தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களிலும் புவனேஸ்வரால் பங்கேற்க முடியாமல் போனது.
பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வர் குமாரால், ஆறு மாதங்களுக்கு மீண்டும் விளையாட முடியாது, பழையபடி முழு உடற்தகுதியை அடைய சிறிது காலமாகும். அதனால் ஐபிஎல் வரை எந்த ஒரு போட்டியிலும் அவரால் கலந்துகொள்ள முடியாது என பிசிசிஐயைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் அனைவரும் ஆச்சர்யப்படும்படி தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார் புவனேஸ்வர் குமார். இதையடுத்து சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான உத்தரப் பிரதேச டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து தில்லியிருந்து பெங்களூர் சென்று டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளார்.
இதனால், இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் புவனேஸ்வர் குமார் தேர்வாக வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


