பூசணிக்காயை வைத்து அருமையான பொரியல் செய்யலாம்.
தேவையானவை:
பெரிய துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காய் - 1 கிண்ணம், மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி, மிளகாய் வற்றல் - 3, உப்பு - தேவையான அளவு, தேங்காய்த் துருவல் - 3 மேஜைக்கரண்டி, தாளிக்க - எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி , கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும். தேங்காய்த் துருவலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிக்குழம்பு சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுக்குப் பரிமாறலாம்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


