* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது, வெல்லத்தை அப்படியே சேர்ப்பதற்கு பதில் வெல்லப்பாகு காய்ச்சி சேர்த்தால் சுவை கூடுதலாகவும், நீண்ட நேரம் கெட்டுப்போகாமலும் இருக்கும்.
* இனிப்பு பொங்கல் செய்யும்போது மொத்தமாக நெய் விடாமல், பரிமாறும்போது பொங்கலின் மீது சிறது நெய் ஊற்றி பரிமாறினால் நெய் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.
* தண்ணீருடன், சிறிது பால் அல்லது மில்க்மெய்ட் சேர்த்து பொங்கல் செய்தால் சுவை கூடும்.
* சர்க்கரைப் பொங்கல் பரிமாறும் போது, மேலாக சிறிது தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம்.
* முழு அரிசியில் பொங்கல் செய்யாமல், மிக்சியில் அரிசியை ஒன்றிரண்டாக உடைத்து செய்தால் விரைவில் வெந்துவிடும். நல்ல குழைவாகவும் இருக்கும்.
* முந்திரி, பாதாமை ஒடித்து போடாமல், மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து சேர்த்தால் இனிப்பு பொங்கலில் சுவை கூடுதலாக இருக்கும்.
* பச்சரிசிக்குப் பதில், வரகு, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களில் பொங்கல் செய்தால் உடலுக்கு சத்தானதாக இருக்கும்.
* அரிசி, பாசிபருப்பை தனித்தனியே வேக வைத்து பின்னர் சேர்த்து கிளறி வெல்லம் சேர்த்தால் பொங்கல் நன்கு குழைவாக இருக்கும்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


