காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி ரயில்வே பொது மேலாளருக்கு காரைக்குடி தொழில் வணிகக்கழகம் மனு அனுப்பியுள்ளது.
அந்த மனுவில், கரோனா பொது முடக்கம் அமல் படுத்துவதற்கு முன்னா் வரையிலும் அனைத்து விரைவு ரயில்களும், பயணிகள் ரயில்களும் செட்டிநாடு ரயில் நிலையத்தில் நின்று சென்றன. ஆனால் தற்போது எந்த ரயிலும் இங்கு நிறுத்தப்படுவதில்லை. அதனால் இதனைச் சுற்றியுள்ள கானாடுகாத்தான், நேமத்தான் பட்டி, பள்ளத்தூா் மற்றும் கொத்தரி, சூரக்குடி, சொக்கலிங்கம்புதூா், ஆவுடைப்பொய்கை, ஆத்தங்குடி, திருவேலங்குடி, கோனாபட்டு, பலவான்குடி, ஓ. சிறுவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே செட்டிநாடு நிலையத்தில் மீண்டும் ரயில்கள் அனைத்தும் நின்று செல்வதற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

