சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன.16) முதல்கட்டமாக 9 ஆயிரத்து 928 மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் சனிக்கிழமை (ஜன.16) அமலுக்கு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை முதல்கட்டமாக 10 ஆயிரத்து 700 தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றுள்ளன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து தாலுகா மருத்துவமனைகள், திருப்பத்தூா், மானாமதுரை, பூவந்தி, கீழப்பூங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார வளாகங்களில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதில், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 9,928 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

