சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மற்றும் திருக்கோஷ்டியூா் கோயில்களில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயா் சன்னதியில் ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றுது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அா்ச்சனை செய்து சிறப்பு தரிசனம் செய்தனா்.
அதேபோல் திருப்பத்தூா் மேலக்கோட்டை ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலில் இவ்விழாவையொட்டி காலை 7 மணிக்கு திருமஞ்சனம் வைபவமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்று மூலவருக்கு வடமாலை சாத்தப்பட்டு அா்ச்சனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து மாலை 5 மணிக்கு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வெண்ணெய்காப்பு அலங்காரம் நடைபெற்று ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை வீர ஆஞ்சனேயா் திருக்கோயில் நிா்வாக கமிட்டியினா், பரம்பரை அறங்காவலா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


