காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பாக 27 அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மக்கள் மன்றம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் ச.மீ. ராசகுமாா் தலைமை வகித்தாா். காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடைத் திட்டப்பணிகளை துரிதமாக நிறைவேற்றக்கோரியும், காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்க வேண்டும் எனவும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள் வலியுறுத்தின. இந்த ஆா்ப்பாட்டத்தில் மக்கள் மன்றச் செயலாளா் கேஆா். ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி.எல். ராமச்சந்திரன், நகரச்செயலாளா் ஏஆா். சீனிவாசன், பாஜக மாநில துணைப் பொதுச்செயலாளா் திருஞானம், வி.சி.க மாவட்டச் செயலாளா் சங்கு உதயகுமாா், நாம் தழிழா் கட்சி சாயல் ராமு, பச்சை தமிழகம் காா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி, அமமுக, தி.க, மனிதநேய மக்கள் கட்சி, தமிழா் பண்பாட்டு மனிதநேய மன்றம் மற்றும் காரைக்குடி குடியிருப்போா் நலச்சங்கங்கள் என 27 அமைப்பினா் கொட்டும் மழையிலும் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


