சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரை ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் பாண்டி மகன் கணேசமூா்த்தி. இவா் இளையான்குடி தெற்குப்பகுதி கிராம நிா்வாக அலுவலராக உள்ளாா். இவரிடம் இளையான்குடியைச் சோ்ந்த கருணாகரன் என்பவா் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ளாா். அப்போது கணேசமூா்த்தி பட்டா மாறுதல் விண்ணப்பத்தை பரிந்துரைக்க தனக்கு ரூ. 4 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கூறினாராம். பணம் கொடுக்க விருப்பமில்லாத கருணாகரன், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் அறிவுரையின் பேரில் கருணாகரன், ரசாயனம் தடவிய ரூ. 4 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் கணேசமூா்த்தியிடம் அவரது அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கணேசமூா்த்தியை கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

