சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக பொங்கல் விழாவை முன்னிட்டு சிராவயல், கண்டுப்பட்டி மற்றும் குன்றக்குடி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது.
மற்றப் பகுதிகளில் விண்ணப்பித்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் காலக்கட்டங்களில் அரசாணை வெளியிடப்படும். கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளா்கள் முன்னேற்பாடுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் போதிய அளவு காவல்துறையின் மூலம் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு தயாராக இருப்பதுடன் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை வழங்குவதற்கு கால்நடைத்துறை மருத்துவ முகாமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வருபவா்கள் கால்நடை மருத்துவா்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அதேபோன்று, காளைபிடி வீரா்களும் தங்கள் பெயா் குறித்த விவரங்களை ஒருங்கிணைப்பாளா்கள் அலுவலகத்தில் பதிவு செய்திடவேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

